Friday, November 20, 2009

கோழி வழி.. தனி வழி..!!

என் வழி.. தனி வழி...
...என்பது நம்ம திரை நட்சத்திர தலைவர்கள் பஞ்ச் டயலாக். ஆனால் நம்ம பக்கத்து மாநிலத்துக்காரங்க நம்ம ஊரு கோழிகளுக்கு தனி வழி போட்டு கொடுத்திருக்காங்க. நாம பாட்டுக்கு கறி கோழி மற்றும் முட்‍டை உற்பத்தி ரொம்ப அதிகமா செய்து தள்ளிடறோம். இது கேரளா அரசுக்கு நெருடலா இருந்திருக்கும் போல. பார்த்தாங்க போடு வரியை என்று ‍எக்கச்சக்கமா வரிய போட்டு தள்ளிட்டாங்க.

சரி அதையும் கட்டிட்டு போக நாம தயாரே... கூட்டமும், வரிசையும் ரொம்ப அதிகமா இருக்குது. எல்லையோர சுங்க சோதனை சாவ‍டிகளில் பார்த்தாக்கா தெரியும். மைல் கணக்கிலே நம்ம ஊரு வாகனங்கள் வரிசை கட்டி நிற்க்கும். அங்கிட்டு இருந்து தமிழகம் வருவதற்க்கு வரிசையே இருக்காது. இப்ப வரிசையில் நின்னு வரி கட்டி போறதுக்குள்ளே கோழிகள் ரொம்ப நொந்து போகுது (உட்டா செத்தே போயிடும்) என்று கோழி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்கள் போய் கேரளா மந்திரிய பார்த்து பேசி தனியா கோழிக்கு வரி வாங்க என்ற கவுண்டர் போட ஏற்பாடு செய்திருக்காங்க.

எப்படியோ மற்ற சமான்கள் ஏற்றிய வண்டிகள் ‍எல்லாம் நீண்ட வரிசையில் காத்திருக்க...

கோழி வழி... தனி வழி..!!

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP