Saturday, November 28, 2009

செவ்வாயில் உயிரினம் : நாசா

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்திருக்க கூடும் என்பது குறித்து நாசா புதிய அறிவிப்பு விடும் என்று எதிர்பார்க்க படுகிறது. ஆனால் வித்தியாசமாக செவ்வாயில் ஆராயமல் அண்டார்டிக் பகுதியில் கடந்த 1996 ம் ஆண்டு ஒரு பாறையானது 13,000 ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்து பூமியில் விழுந்தது என்று அடையாளம் காணப் பட்டு, அதற்க்கு 'அலென் ஹில்ஸ் 84001' என்றும் பெயரிட்டுள்ளார்கள்.

அந்த பாறையில் உயிர்த் தன்மைக் கொண்ட படிமங்கள் இருந்தது. அந்த காலக்கட்டத்தில் அது செவ்வாயில் இருந்த உயிரிகள் என்பதை பெரும்பாலோனோர் ஏற்றுக் கொள்ளாது நிராகரித்தனர். அந்த பாஸில்கள் பாறை பூமியில் மோதியதால் ஏற்பட்ட பூமியை சார்ந்த உயிர்மங்கள் என்று முடிவானது.

1996 ல் இருந்ததை விட இன்றைக்கு மிக அதி நவீன நுண்ணிய நோக்கிகள் (மைக்ரோஸ்கோப்புகள்) வந்து விட்டன. அவற்றின் உதவியுடன் கேத்தி தாமஸ்-கெர்டா என்ற நாசாவின் விஞ்ஞானிகள் மீண்டும் ஆராய தொடங்கினர். அவர்கள் ஆராய்ச்சியின் முடிவில் கார்பொனைட் மற்றும் மக்னீஸிய உலோக படிகங்களை அந்த பாறையில் கண்டறிந்துள்ளார்கள். இவ்வாறு அந்த பாறையில் காணப்படும் உலோகங்கள் நமது பூமியின் வழமைக்கு மாறாக வேதியியல் மற்றும் இயற்பியல் தன்மைகள் அடங்கியதாக உள்ளன.
இந்த உலோக படிகங்கள் 13,000 ஆண்டுகளுக்கு முன் உண்டானவ‍ை அல்ல, நிச்சயமாக அதற்க்கு முற்காலத்தே (செவ்வாயில்) உருவாகியிருக்க வேண்டும்.

இந்த பாறையில் உள்ள படிமங்கள் பூமியில் உண்டானவைகள் அல்ல என்பது நிரூபிக்க பட்டால் சூரிய குடும்பத்தில் உயிரினங்கள் தோன்றியது குறித்த அறிவு மேலும் அதிகமாகும் என்பதாக இங்கிலாந்தின் 'அஸ்ட்ரானமி நவ்' இதழின் துணையாசிரியர் எமிலி பால்ட்வின் கூறியுள்ளார்.

இது குறித்த மேலதிக தகவல் கட்டுரை சுட்டி

Read more...

Thursday, November 26, 2009

ஆங்கிலத்தை கெடுக்கும் இந்தி

ஆங்கிலத்தை கெடுக்கும் இந்தி

நண்பர் செல்வன் அவர்கள் அனுப்பியிருந்த மடலானது ஆங்கிலத்தை இந்தி எந்தளவு கெடுக்கிறது என்பதை விளக்குகிறது...

உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய் என்ற கதையாய் உலக மொழிகளை எல்லாம் கெடுத்து வந்த ஆங்கிலத்தை இப்போது இந்தி கெடுத்து கர்ப்பமாக்கிவிட்டதாக பிபிசி கூறியுள்ளது.

தமிழில் ஆங்கிலம் கலந்து தமிங்கிலம் உருவானது போல் இந்தியில் ஆங்கிலம் கலந்து இங்கிலம் உருவானது.இந்திகாரர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதாலும் பிரிட்டனில் குடியேறிகள் அதிகரிப்பதாலும் அரசியின் ஆங்கிலத்தில் இந்தோ-ஆங்கில-இந்தி வார்த்தைகள் அதிகம் கலந்துவிட்டனவாம்.

ஹிங்லிகீசை அதிகம் பயன்படுத்துவது ஷோபா டே, சல்மான் ருஷ்டி மாதிரி இந்திய வமசாவளி எழுத்தாளர்களாம்.இந்தியர்களுடன் கிரிக்கட் விளையாடும் பிரிட்டிஷ் குழந்தைகள் பக்கா, பத்மாஷ் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்களாம். வைப்பாட்டியை குறிக்க இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஸ்டெப்னி என்ற சொல் ஆங்கில அகராதியில் ஏறிவிட்டதாம். ஸ்டெப்னி தெரு என்ற பிரிட்டிஷ் தெருவில் தான் ஸ்டெப்னி டயர்கள் முன்பு உற்பத்தி செய்யப்பட்டன.இப்போது நம்மாட்களின் புண்ணீயத்தால் ஸ்டெப்னி என்ற வார்த்தை அகராதியில் ஏறியுள்ளது.

இது போக சுடி (சுடிதார்),பங்களா மாதிரி வார்த்தைகள் அரசியின் ஆங்கிலத்தில் ஏறியுள்ளன என குறிப்பிடும் பிபிசி இந்த மொழிகலப்பை எண்ணி வருத்தப்படும் என்று தானே நினைக்கிறீர்கள்?அப்படி நினைத்தால் அவர்களுக்கும் நம்மூர் மொழிதூய்மையாளர்களுக்கும் என்ன வித்தியாசம்?

"இது என் மொழி.இது மாறாமல் இருக்கவேண்டும் என மக்கள் நினைக்கலாம்.ஆனால் யதார்த்தம் அப்படி இல்லை.ஸேக்ஸ்பியரின் ஆங்கிலம் சாசரின் ஆங்கிலத்தில் இருந்து வேறுபட்டது.மொழிகளின் பரிணாம வளர்ச்சி நிற்கபோவதில்லை" என அழகாக கட்டுரையை முடிக்கிறது பிபிசி.

--
செல்வன்

... சும்மா சொல்ல கூடாது நமக்கு தான் பிரச்சினை என்று பார்த்தால் எல்லாருக்கும் அவரவர் விரலுக்கு தகுந்த வீக்கம் இருக்கும் போல தான்... :)

Read more...

Wednesday, November 25, 2009

பாராட்டும், வாழ்த்துகளும் பிரதமரே, குடியரசு தலைவரே..!!

இன்றைக்கு இரண்டு முக்கிய ‍செய்திகள் படிக்க நேர்ந்தது.
உடனே நம்ம பிரதமரையும், குடியரசு தலைவரையும் பாராட்ட
தோன்றியது. செய்தியும், விவரமும்....

சீனாவின் பொருளாதார வளர்ச்சி, இந்திய பொருளாதார வளர்ச்சியை விட முன்னணியில் உள்ளது. ஆனால், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியை விட, அடிப்படை மனித உரிமைகள், கலாசாரம் மற்றும் மதரீதியான கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது மிகவும் அவசியம். எனவே, பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் செயல்பாடு, சீனாவின் செயல்பாட்டை விட பின்தங்கி இருந்தாலும், சீனாவின் பாதையை தேர்ந்தெடுக்க நான் விரும்பவில்லை. எப்போதும் இந்திய பாதையிலேயே செல்ல விரும்புகிறேன். இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.


செய்தி தினமலர் சுட்டி: http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4260

இதை விட சிறப்பாக ஒரு சனநாயக தலைவர் கருத்து சொல்ல இயலாது. எப்படியோ சுதந்திரம் பெற்ற போது இருந்த தலைவர்கள் இப்படி கருதியதால் இன்றைக்கு நாங்கள் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெற்று இன்புறுகிறோம். எங்கள் சந்ததியினருக்கும் இது கிடைக்கும் என்ற நம்பிக்கை வலுத்து வருகிறது.

ஜனாதிபதி பிரதிபா பட்டீல் சுகோய் -30 எம்.கே.ஐ., ரக போர் விமானத்தில் வெற்றிகரமாக பயணம் மேற்கொண்டார். சர்வதேச அளவில் சு‌கோய் போர் விமானத்தில் பயணம் செய்த முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை நிலைநாட்டினார். அவர் புனேயில் இருக்கும் லோஹேகான் விமானப்படை தளத்தில் இருந்து சரியாக காலை 11 மணி அளவில் சுகோய்- 30 எம்.கே.ஐ., போர் விமானத்தில் பயணத்தை துவக்கினார். சுமார் 30 நிமிடங்கள் பயணம் நீடித்தது. ஜனாதிபதி பயணித்த விமானத்தை விங் கமாண்டர் எஸ்.சாஜன் இயக்கினார்.

செய்தி தினமலர் சுட்டி : http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1594

சமூகத்தில் ஆண், பெண் இனப் பேதம் அடிமட்டத்தில் ஆங்காங்கே இருந்தாலும் பாலின பாகுபாடு இன்றி இந்திய நிர்வாகத்தில் பெண்களுக்கு கிடைத்து வரும் உரிமைகள் சில வளர்ந்து நாடுகளிலேயே கிடைக்காத அளவு உள்ளதாக இருக்கிறது. விமான பயணத்தினால் பெண்களுக்கு பெரிய நன்மை என்று அர்த்தம் கிடையாது. இந்திரா, பிரதிபா போன்று எந்த பெண்மணிகள் வந்தாலும் நம் சமூகம் சரி சமமாகவே நடத்துகின்றது என்பது மிகவும் மகிழ்வான விசயமே.

பாராட்டும், வாழ்த்தும் சொல்ல இமயமலையை நகர்த்தினால் தான் செய்யனும் என்று இல்லையே... :)

Read more...

Friday, November 20, 2009

கோழி வழி.. தனி வழி..!!

என் வழி.. தனி வழி...
...என்பது நம்ம திரை நட்சத்திர தலைவர்கள் பஞ்ச் டயலாக். ஆனால் நம்ம பக்கத்து மாநிலத்துக்காரங்க நம்ம ஊரு கோழிகளுக்கு தனி வழி போட்டு கொடுத்திருக்காங்க. நாம பாட்டுக்கு கறி கோழி மற்றும் முட்‍டை உற்பத்தி ரொம்ப அதிகமா செய்து தள்ளிடறோம். இது கேரளா அரசுக்கு நெருடலா இருந்திருக்கும் போல. பார்த்தாங்க போடு வரியை என்று ‍எக்கச்சக்கமா வரிய போட்டு தள்ளிட்டாங்க.

சரி அதையும் கட்டிட்டு போக நாம தயாரே... கூட்டமும், வரிசையும் ரொம்ப அதிகமா இருக்குது. எல்லையோர சுங்க சோதனை சாவ‍டிகளில் பார்த்தாக்கா தெரியும். மைல் கணக்கிலே நம்ம ஊரு வாகனங்கள் வரிசை கட்டி நிற்க்கும். அங்கிட்டு இருந்து தமிழகம் வருவதற்க்கு வரிசையே இருக்காது. இப்ப வரிசையில் நின்னு வரி கட்டி போறதுக்குள்ளே கோழிகள் ரொம்ப நொந்து போகுது (உட்டா செத்தே போயிடும்) என்று கோழி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்கள் போய் கேரளா மந்திரிய பார்த்து பேசி தனியா கோழிக்கு வரி வாங்க என்ற கவுண்டர் போட ஏற்பாடு செய்திருக்காங்க.

எப்படியோ மற்ற சமான்கள் ஏற்றிய வண்டிகள் ‍எல்லாம் நீண்ட வரிசையில் காத்திருக்க...

கோழி வழி... தனி வழி..!!

Read more...

Wednesday, November 18, 2009

இந்தோ-ரஷ்யா புதிய வர்த்தக புரட்சி...!!

சமீபத்தில் வெளியான பொருளாதார ஆய்வறிக்கைகள் இந்திய, ரஷ்ய வர்த்தகமானது மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருவதாக தெரிவிக்கின்றது. வீட்டு உபயோக பொருள்கள் சந்தையானது இந்தியாவை காட்டிலும் பல மடங்கு அதிகமாக உள்ளதால் நிறுவனங்கள் மும்மரமாக சந்தையை பிடிக்க முயன்று வருகின்றன.

டாடா தனது டீ, கார் போன்றவற்றையும், ரிலையன்சு காரங்க பெட்ரோல் மற்றும் எண்ணெய் சமாச்சாரங்களிலும், மல்லையா சீமை சரக்‍கையும், மருந்து நிறுவனங்கள் என்றும் பலரும் களமிறங்கியுள்ளனர்.

கடந்த 2008 ம் ஆண்டு 6.9 பில்லியன் டாலர் அளவு இரு தரப்பு வர்த்தகம் நடந்திருக்கு. இதே போக்கில் சென்றால் அடுத்த 2010ம் ஆண்டு 10 பில்லியனை எட்டி விடும் என்று ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.

ஆனாலும் நம்ம பங்காளி சீனக் காரவிகளும் போட்டிக்கு வருவாங்க.. பார்ப்போம் போட்டியினை ஒரு கை...

அப்ப திரும்ப அந்த கால சோவியத் ரஷ்யா பொஸ்தகம் வருமான்னு பக்கத்துட்டு அண்ணாச்சி கேட்கிறாரு...


செய்தி மூலம் : மீண்டும் மலர்கிறது இந்திய-ரஷ்ய வர்த்தக உறவு

Read more...

Tuesday, November 17, 2009

உலக பணக்கார நகரமாக நம்ம ஊருக...

இன்றைய தினமலரில்...


உலக பணக்கார நகரமாக டில்லி, மும்பை வரும்

லண்டன் : இந்தியாவில் அமைந்துள்ள டில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள், பெரியளவில் பொருளாதார வளர்ச்சியடைந்து, வரும் 2025ம் ஆண்டு, உலகிலேயே பெரிய பணக்கார நகரங்களாக திகழும் என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



உலகில் அமைந்துள்ள பல்வேறு நகரங்கள் குறித்து பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் நிறுவனம் ஆய்வு ஒன்று நடத்தியது. இதில், பல்வேறு நகரங்கள் வேகமான பொருளாதார வளர்ச்சி அடைந்து வருவது தெரிய வந்துள்ளது.



இதுகுறித்து வெளியிடப்பட்ட ஆய்வு தகவல்:உலகில் அமைந்துள்ள பெரிய நகரங்கள் பலவும் அடுத்த 15 ஆண்டுகளில் வேகமான வளர்ச்சி அடைந்து வருகின்றன. டில்லி, காங்க்சவ், ரியோ டீ ஜெனிரோ, இஸ்தான்புல் மற்றும் கெய் ரோ ஆகிய நகரங்கள், வரும் 2025ம் ஆண்டுக்குள் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.தற்போது, டோக்கியோ, நியூயார்க், லாஸ்ஏஞ்சல்ஸ், லண்டன் மற்றும் சிகாகோ ஆகிய ஐந்து நகரங்கள் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ளன.தற்போது பொருளாதார வளர்ச்சியில், 25வது இடத்தில் இருக்கும் ஷாங்காய், வரும் 2025ம் ஆண்டு 9வது இடத்திற்கு முன்னேறும்.



அதே போன்று 29வது இடத்தில் இருக்கும் மும்பை நகரம், வரும் 2025ம் ஆண்டு 11வது இடத்திற்கும், 39வது இடத்தில் இருக்கும் பீஜிங் 17வது இடத்திற்கும், 10வது இடத்தில் இருக்கும் சாவ் பாவ்லோ மற்றும் பிரேசில் ஆகியவை 6வது இடத்திற்கும் முன்னேறும்.ஷாங்காய், பீஜிங் மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் ஆண்டுக்கு, 6 சதவீதம் முதல் 7 சதவீதம் வளர்ச்சியடைந்து வருகின்றன. ஆனால், லண்டன், நியூயார்க், டோக்கியோ மற்றும் சிகாகோ ஆகிய நகரங்கள் ஆண்டுக்கு 2 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்து வருகின்றன.அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த சில நகரங்களின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த 15 ஆண்டுகளில், மெதுவாக சரிவை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.




.... கட்டுரை வந்திருக்கு. சென்னை எல்லாம் எப்ப இந்த பட்டியலுக்கு வருமோ தெரியலையே...

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP