Tuesday, January 5, 2010

தமிழர் அந்தரங்கம்

நம்மவர்கள் கூகிள் போன்ற தேடுபொறிகளை பயன்படுத்தும் முறைகள் குறித்து அறிந்தால் அதிர்ச்சியாக உள்ளது. ஒரு எளிய சோதனையில் அறியலாம்.


www.google.co.in என்ற கூகிள் தளத்தை திறக்கவும். கவனம் co.in என்பதே தமிழகத்தை பிரதிபலிக்கும். கூகிளிக்கிற்க்கு சென்று கீழே உள்ள மொழிகள் தெரிவில் தமிழ் என்பதை தெரிவு செய்து கொள்ளவும். பிறகு தேடுபொறியில் ஏதேனும் ஒரு ஆங்கில எழுத்தை உள்ளீடு செய்யவும். உதாரணமா a என்பதை மட்டும் உள்ளீடு செய்து பாருங்கள்.

தமிழகத்திலிருந்து தேடப் படும் வார்த்தைகளில் முதலிடம் பெற்ற வார்த்தைகள்
சில கூகிளால் பட்டியலிடப் படும். a,k,l,m,n,o போன்ற எழுத்துகள் தரும் விடையானது தமிழகத்தை பற்றி நல்ல அபிப்ராயத்தை தருவதாக இல்லை.

குறிப்பு : இந்த சோதனையில் அருவருக்க தக்க மற்றும் ஆபாச வார்த்தைகள் கிடைக்க கூடும். மனமில்லாதவர்கள் தவிர்க்கவும்.

Read more...

Friday, January 1, 2010

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்...

நண்பர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்...
அனைவருக்கும் அனைத்து நன்மைகளும் கிடைக்கட்டும்.

Read more...

Friday, December 4, 2009

கான்டிராக்டில் நீதிபதிகள்

சமீபத்திய மத்திய அமைச்சரவை சுவாரசியமான முடிவுகள் சிலவற்றை எடுத்துள்ளது.

கான்டிராக்ட் அடிப்படையில் மாதம் ரூ. 1 லட்சம் சம்பளத்திற்கு, 1500 நீதிபதிகளை நியமிக்க மத்திய அமைச்சவரை ஒப்புதல் அளித்துள்ளது.
ஏகப் பட்ட வழக்குகள் தேங்கி போய் உள்ளது. ஓரளவு குறைய வாய்ப்புண்டு. அதே சமயம் இந்த நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் போன்ற தலைவலிகள் கிடையாது. அரசுக்கு ஏகப் பட்ட லாபம்.

தேசிய வழக்கு நிலுவை ஆணையம் என்ற அமைப்பை உருவாக்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அப்பாடா தேர்தல் ஆணையம் போல ஒரு அமைப்பு. சும்மா சும்மா விடுப்பு விட்டு விளையாடும் அமைப்பிற்க்கு ஒரு கடிவாளம் போட கூடும்.பருவகால (கோடைகால) விடுமுறை பள்ளி மாணவர்களுக்கு இருப்பது போல நீதிமன்றத்திற்க்கு தேவையா என்ன?

7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கத்தக்க அனைத்து குற்றங்களிலும், ஒருவரை கைது செய்வதற்கான காரணங்களை சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி எழுத்துமூலம் எழுதித்தர வேண்டும்.
இதனால் என்ன பயன் என்று புரியலே.. :( குறைவான கால குற்றத்திற்க்கு கைது செய்து காலம் தாழ்த்தி இழுத்தடிப்பது தானே தற்போது நடைமுறையில் இருக்கு.

தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒன்றை அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கேட்கவே மகிழ்ச்சியா இருக்கு. கொஞ்சமாவது காடுகள் காப்பாற்ற பட்டால் சரி.

அதேசமயம், கல்வி தீர்ப்பாயம் குறித்த திட்டத்தை அமைச்சர்களைக் கொண்ட குழுவின் ஆலோசனைக்கு அனுப்பி வைக்கவும் அமைச்சரவை முடிவு செய்தது.
அவசரமான தேவையா தெரியலே. மெதுவா வரட்டும்.

ரூ. 10,000 கோடி மதிப்பீட்டில், பாதுகாப்புப் படையினருக்கான ஆப்டிகர் பைபர் கேபிள் அமைக்கும் பணியில் சீன நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது என மத்திய தொலைத் தொடர்புத்துறைக்கு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஏனோ சீனாவிற்க்கு சிரம தசை ஆரம்பம் போல தான் தெரியுது. காரணம் இது போன்ற மக்களாட்சி நாடுகளில் இப்படி குறிப்பிட்டு நாட்டு நிறுவனங்கள் தடை என்பது அவ்வளவு எளிது அல்ல. இதற்க்கு முன்னர் நம் நாட்டிலேயே கம்யூனிஸ்டுகள் அமெரிக்க ஏகாதிபத்தியம் குறித்து அறிக்கை தான் விடுவார்களே தவிர இப்படி அமெரிக்க நிறுவனங்கள் எதற்க்கும் அனுமது கூடாது என்று அமலாக்கியதில்லை. வெளியே ‍‍பெரிசா அறிக்கை தான் விடுவார்கள்.

இன்றைய அளவில் இது ஒரு சிறிய ஆரம்பம் தான் எனினும் காலப் போக்கில் பிற நாடுகளும் இந்த தடை நடவடிக்கைகள‍ை அமல்படுத்த ஆரம்பிக்கும். ‍ஏனெனில் அனைவருக்கும் அவரவர் நாட்டு பாதுகாப்பில் சீன என்ன ஊடுருவல் செய்யுமோ என்ற அச்சம் தானாக பிறக்குமே... :)

Read more...

Saturday, November 28, 2009

செவ்வாயில் உயிரினம் : நாசா

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்திருக்க கூடும் என்பது குறித்து நாசா புதிய அறிவிப்பு விடும் என்று எதிர்பார்க்க படுகிறது. ஆனால் வித்தியாசமாக செவ்வாயில் ஆராயமல் அண்டார்டிக் பகுதியில் கடந்த 1996 ம் ஆண்டு ஒரு பாறையானது 13,000 ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்து பூமியில் விழுந்தது என்று அடையாளம் காணப் பட்டு, அதற்க்கு 'அலென் ஹில்ஸ் 84001' என்றும் பெயரிட்டுள்ளார்கள்.

அந்த பாறையில் உயிர்த் தன்மைக் கொண்ட படிமங்கள் இருந்தது. அந்த காலக்கட்டத்தில் அது செவ்வாயில் இருந்த உயிரிகள் என்பதை பெரும்பாலோனோர் ஏற்றுக் கொள்ளாது நிராகரித்தனர். அந்த பாஸில்கள் பாறை பூமியில் மோதியதால் ஏற்பட்ட பூமியை சார்ந்த உயிர்மங்கள் என்று முடிவானது.

1996 ல் இருந்ததை விட இன்றைக்கு மிக அதி நவீன நுண்ணிய நோக்கிகள் (மைக்ரோஸ்கோப்புகள்) வந்து விட்டன. அவற்றின் உதவியுடன் கேத்தி தாமஸ்-கெர்டா என்ற நாசாவின் விஞ்ஞானிகள் மீண்டும் ஆராய தொடங்கினர். அவர்கள் ஆராய்ச்சியின் முடிவில் கார்பொனைட் மற்றும் மக்னீஸிய உலோக படிகங்களை அந்த பாறையில் கண்டறிந்துள்ளார்கள். இவ்வாறு அந்த பாறையில் காணப்படும் உலோகங்கள் நமது பூமியின் வழமைக்கு மாறாக வேதியியல் மற்றும் இயற்பியல் தன்மைகள் அடங்கியதாக உள்ளன.
இந்த உலோக படிகங்கள் 13,000 ஆண்டுகளுக்கு முன் உண்டானவ‍ை அல்ல, நிச்சயமாக அதற்க்கு முற்காலத்தே (செவ்வாயில்) உருவாகியிருக்க வேண்டும்.

இந்த பாறையில் உள்ள படிமங்கள் பூமியில் உண்டானவைகள் அல்ல என்பது நிரூபிக்க பட்டால் சூரிய குடும்பத்தில் உயிரினங்கள் தோன்றியது குறித்த அறிவு மேலும் அதிகமாகும் என்பதாக இங்கிலாந்தின் 'அஸ்ட்ரானமி நவ்' இதழின் துணையாசிரியர் எமிலி பால்ட்வின் கூறியுள்ளார்.

இது குறித்த மேலதிக தகவல் கட்டுரை சுட்டி

Read more...

Thursday, November 26, 2009

ஆங்கிலத்தை கெடுக்கும் இந்தி

ஆங்கிலத்தை கெடுக்கும் இந்தி

நண்பர் செல்வன் அவர்கள் அனுப்பியிருந்த மடலானது ஆங்கிலத்தை இந்தி எந்தளவு கெடுக்கிறது என்பதை விளக்குகிறது...

உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய் என்ற கதையாய் உலக மொழிகளை எல்லாம் கெடுத்து வந்த ஆங்கிலத்தை இப்போது இந்தி கெடுத்து கர்ப்பமாக்கிவிட்டதாக பிபிசி கூறியுள்ளது.

தமிழில் ஆங்கிலம் கலந்து தமிங்கிலம் உருவானது போல் இந்தியில் ஆங்கிலம் கலந்து இங்கிலம் உருவானது.இந்திகாரர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதாலும் பிரிட்டனில் குடியேறிகள் அதிகரிப்பதாலும் அரசியின் ஆங்கிலத்தில் இந்தோ-ஆங்கில-இந்தி வார்த்தைகள் அதிகம் கலந்துவிட்டனவாம்.

ஹிங்லிகீசை அதிகம் பயன்படுத்துவது ஷோபா டே, சல்மான் ருஷ்டி மாதிரி இந்திய வமசாவளி எழுத்தாளர்களாம்.இந்தியர்களுடன் கிரிக்கட் விளையாடும் பிரிட்டிஷ் குழந்தைகள் பக்கா, பத்மாஷ் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்களாம். வைப்பாட்டியை குறிக்க இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஸ்டெப்னி என்ற சொல் ஆங்கில அகராதியில் ஏறிவிட்டதாம். ஸ்டெப்னி தெரு என்ற பிரிட்டிஷ் தெருவில் தான் ஸ்டெப்னி டயர்கள் முன்பு உற்பத்தி செய்யப்பட்டன.இப்போது நம்மாட்களின் புண்ணீயத்தால் ஸ்டெப்னி என்ற வார்த்தை அகராதியில் ஏறியுள்ளது.

இது போக சுடி (சுடிதார்),பங்களா மாதிரி வார்த்தைகள் அரசியின் ஆங்கிலத்தில் ஏறியுள்ளன என குறிப்பிடும் பிபிசி இந்த மொழிகலப்பை எண்ணி வருத்தப்படும் என்று தானே நினைக்கிறீர்கள்?அப்படி நினைத்தால் அவர்களுக்கும் நம்மூர் மொழிதூய்மையாளர்களுக்கும் என்ன வித்தியாசம்?

"இது என் மொழி.இது மாறாமல் இருக்கவேண்டும் என மக்கள் நினைக்கலாம்.ஆனால் யதார்த்தம் அப்படி இல்லை.ஸேக்ஸ்பியரின் ஆங்கிலம் சாசரின் ஆங்கிலத்தில் இருந்து வேறுபட்டது.மொழிகளின் பரிணாம வளர்ச்சி நிற்கபோவதில்லை" என அழகாக கட்டுரையை முடிக்கிறது பிபிசி.

--
செல்வன்

... சும்மா சொல்ல கூடாது நமக்கு தான் பிரச்சினை என்று பார்த்தால் எல்லாருக்கும் அவரவர் விரலுக்கு தகுந்த வீக்கம் இருக்கும் போல தான்... :)

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP