நாமும் நரகாசுரர்களோ..?
சில நாட்கள் முன்னர் விலங்கியல் பூங்காவிற்க்கு போய் இருந்த போது வலைகளுக்கு உள்ளே இருந்த பறவைகள் குறித்து பேசும் போது அவைகளை பொறுத்த வரை காலம் காலமாக நாம் அழிக்க இயலா நரகாசுரர்களா இருப்பதாக தோன்றியது.
என்ன அவைகளை காக்க என்று நம்மை வதம் செய்து மீட்பளிக்க எந்த பகவானும் வரமாட்டாரே... என்றெல்லாம் மனவோட்டம். கஜேந்திர மோட்சம் அளித்ததுடன் ஆண்டவன் ஆயசமாகி விட்டாரோ..?
ஒரு வகையில் பார்க்க போனால் வேட்டைகாரர்களிடமிருந்து இவைகளை காப்பாற்றியுள்ளதாக மனம் மகிழ்ந்துக் கொண்டாலும் இவைகள் இப்படியா இருக்க வேண்டியவை... அந்த வானமே எல்லையாய் பறக்க வேண்டியவை அல்லவா... தங்க கூண்டே எனினும் சுதந்திரம் இன்மை கொடுமையே.
0 comments:
Post a Comment