சத்யம் - டெக் மகிந்திரா
சத்யம் நிறுவனத்தை டெக்மகிந்திரா நிறுவனம் கையகப் படுத்தியுள்ளது.
பலத்த போட்டியில் கிட்டதட்ட தனது அடுத்த நிலை போட்டியாளரை விட 20 சதம்
அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. அந்தளவு அதில் லாபம் இருக்க போகிறதா அல்லது எல்அண்டி தன்னிடம் ஏற்கனவே கணிசமான பங்கு கைவசம் உள்ளது என்ற மனோபாவத்தில் விலையை சற்று குறைவாக கேட்டிருந்ததோ என்னவோ...
எப்படியோ இந்தியா போன்ற வளரும் நாட்டில் இவ்வளவு பெரிய நிறுவனம் அதிக சேதமின்றி கைமாறியது மிகவும் குறிப்பிட தக்க விசயமே.
இது குறித்து நாஸ்காம் தலைவர் சோம் மித்தல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்...
'சரியாக 100 நாட்களில் மீ்ண்டும் சத்யம் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியுள்ளது சாதாரண விஷயமல்ல. பெரும் சாதனை. அந்த சாதனையைச் செய்தது இந்திய அரசு தான் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்ள வேண்டும். அரசின் இந்த முயற்சிக்கு முடிந்த வரை கைகொடுத்தவர்கள் சத்யம் வாடிக்கையாளர்களும் சக நிறுவனங்களும். உலகின் வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாத ஒரு சந்தோஷமான நிகழ்வு இது' என்கிறார்.
உண்மைதான் அதிக சேதாரம் இன்றி நிறுவனம் காப்பாற்ற பட்டு விட்டது. பார்ப்போம் அதிக விலை கூறி வாங்கிய பின் பணம் செலுத்தும் போது
சில பிரச்சினைகள் ஏற்படும் பல இடங்களில். மகிந்திரா நிறுவனங்கள் அவற்றையும் வெற்றிகரமாக முடித்து கைக் கொள்ள வாழ்த்துவோம்.
0 comments:
Post a Comment